அகம், புறம், மதுரை காஞ்சி, திருமுருகாற்றுப்படை, ஆகிய சங்க இலக்கியங்களும்
மற்றும் காவியமாகிய சிலம்பும் இவைகளில் கூறப்படும் செய்திகள், அசோகா, கலிங்க
மன்னன் காரவேலா மற்றும் மாங்குளம், அழகர் மலை, சமனர் மலை கல்வெட்டுகள் செய்தியோடு
ஒத்து போகிறது.
மதுரை காஞ்சி மதுரையை பற்றிய ஒரு சுற்றுலா வழிகாட்டி என்று சொல்லலாம். அது
விடி காலையிலிருந்து, இரவு வரை உள்ள வாழ்க்கையை பற்றியும், மக்கள் வழிபடும் கடவுள்
பற்றியும், அவர்கள் கொண்டாடும் விழாக்கள் பற்றியும், வெளிநாட்டு வணிகர்கள் மற்றும்
அவர்கள் வணிகம் செய்யும் பொருட்கள் பற்றியும், இசை, ஆடல், கலை பற்றியும் மற்றும்
மக்கள் உண்ணும் உணவு பற்றியும் இன்னும் பல விசயங்களையும் கூறுகிறது.
மாங்குளத்தில் கி.மு. 2ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் – பிராமி கல்வெட்டுகள் 6
உள்ளன. அதில் 2 கல்வெட்டுகள் நெடுஞ்செழியன் என்ற மன்னனை பற்றி கூறுகின்றன. மதுரை
காஞ்சியில் வரும் மன்னன் பெயர் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் அவன்
காலம் கி.மு. 2ம் நூற்றாண்டு (‘சங்க கால மன்னர்களின் கால நிலை’ – Dr.பத்மஜா ரமேஷ் & V.P.புருஷ்த்துமன்).
கல்வெட்டும், மதுரை காஞ்சியும் ஒத்து போகிறது. மேலும் மாங்குளம் கல்வெட்டில்
குறிப்பிடப்படும் வெள் அரிய் இன்று வெள்ளரிப்பட்டி (T.V.S. சக்கரா அமைந்துள்ள இடம்)
என்று அழைக்கப்படுகிறது.
அழகர் மலை கல்வெட்டு 12லிம் வெவ்வேறு மதுரை வணிகர்களை பற்றி கூறுகிறது. இது மதுரை
காஞ்சியில், வணிகர்களை பற்றி கூறப்படுவதோடு ஒத்து போகிறது.
சங்க இலக்கியங்கள் பாடலாகவும், மற்றும் அதன் நம்பகத்தன்மை சந்தேகத்திற்கு
உரியதாக உள்ளது என்று கூறி அதை சான்றாக ஏற்று கொள்ள சரித்திர அறிஞர்கள் மறுக்கிறார்கள்.
நம்பகத்தன்மையை பொருத்த வரை, உயர் திரு.உ.வே.சாமிநாத அய்யர் (தமிழ் தாத்தா) தனியார்களிடமும்,
மடங்களிலும் இருந்து ஒலை சுவடிகளை பெற்று, அவைகளில் இடை சேர்க்கை மற்றும் கரையானால்
அரிக்கப்பட்ட பகுதிகளை சரி பார்த்து, பதிப்பிக்க செய்தார். இதில் பத்து பாட்டு
மூலமும் நச்சினார்க்கினியர் உரையும் கிடைத்துயுள்ளது.
மற்றொரு காரணமாக கூறப்படும் பாடல்களாக உள்:ளது என்பதற்கு தமிழ் கலாச்சாராத்தை
பார்த்தால் தெரியும். எந்த ஒரு பொருள் பற்றி எழுத வேண்டுமானலும், அதை பாட்டாகவே
எழுதுவார்கள். மருத்துவம், சோதிடம், சித்தர் பாடல்கள் யாவும் பாடலாகவே உள்ளன.
தமிழில் முதல் உரை 1857ல் எழுதப்பட்டு 1879ல் பதிப்பிக்கப்பட்ட மயூரம் வேதாநாயாக
பிள்ளை அவர்களின் ‘பிராதாப முதலியரின் சரித்திரம்’ ஆகும். அதற்கு முன்னால் யாவும்
பாடலாகவே இருந்தது.
அகம், புறம், பத்து பாட்டு மற்றும் சிலம்பில் உள்ள செய்திகள் கல்வெட்டுகளோடு
ஒத்து போகிறது ஆகவே இவைகளை சரித்திர ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு சுவாரசியமான விசயம், நம் இந்திய சரித்திரத்திற்கு முக்கியமான ஆதாரமாக
எடுக்கப்பட்டது, Megasthenes எழுதிய Indica ஆகும். ஆனால் இதன் மூல பிரதி பாதுகாக்கப்படவில்லை. இவர் எழுதிய Indica வை மேற்கோள் காட்டி பிற
கிரேக்க அறிஞர்கள் எழுதியதை, E.A.Schwanbeck, 1846ல் தொகுத்து புத்தகமாக
வெளியிட்டார். ஆக இவ்வாறு தொகுக்கப்பட்ட Indica வை நம்பத்தன்மை வாய்ந்ததாக கருதும் பொழுது சங்க இலக்கியம்
ஏன் மறுக்கப் படுகிறது?
மதுரைக்காஞ்சி வாசித்துக் கொண்டிருக்கிறேன். சங்ககால மதுரையை படம் பிடித்துக் காட்டும் மாங்குடி மருதனாரின் கவியாற்றலை எண்ணி வியந்துகொண்டே!
பதிலளிநீக்கு