மதுரையின் அமைப்பு
என் ஆய்வின் மிக முக்கியமான தகவல், கூடல் பெயர்
காரணமும், நகர அமைப்பும்தான். இதை பயன்படுத்துவோர் என் பெயரை மேற்கோள் காட்டி
பயன்படுத்தவும்.
மதுரையின் முதல் பெயர் கூடல். கூடல் என்ற பெயர் காரணம், ஏற்கனவே கூறியபடி confluence of two or
more rivers. மதுரையின் வடக்கே வைகையும், மேற்கு மற்றும் தெற்கே கிருதுமாலும், மேலும்
வைகையின் இரண்டு துணை நதிகள் மேற்கிலும், கிழக்கிலும் ஒடுகிறது. இது 1757 வருட
பிரிட்டிஷ் சர்வே வரைபடத்தில் காணலாம். இன்றும் இந்நீர் வழி சாலை அகலம்
குறைக்கப்பட்டு, சாக்கடை நீர் கலந்து செல்வதை Google Earth மூலம் பார்க்கலாம்.
மதுரையின் வடக்கை வைகை அமைந்துள்ளது. அதன் தெருக்களும், கட்டிடங்களும் சரியான
வட-கிழக்கு திசையில் அமையாமல், 14゚கோணத்தில் வடக்கு பக்கம் சாய்ந்துள்ளது. இதற்குக் காரணம் காற்றின் திசையாக (predominanent wind
direction) இருக்கலாம். மதுரை நகர்அமைப்பு சிந்து சமவெளி நாகரிகத்தை ஒத்துள்ளது. ரோமர்,
கிரேக்க நாகரிகம் போல் பெரிய கட்டிடங்களோ, வழிபடும் இடமோ அல்லது அரண்மனையோ இல்லை.
அணைத்தும் தேவைக்கு ஏற்ப உள்ளது.
எல்லா தெருக்களும் ஒன்றுக்கு ஒன்று இணையாகவும், குறுக்காகவும், மற்றும்
குடியிருப்புகள், சிறு தொழில்கள், தானியம் விற்பனை கடைகள், தங்கம், வைரம் கடைகள்,
இரும்பு வார்ப்பட பொருட்கள் விற்பனை கடைகள், சோத்து கடைகள் (உணவகங்கள்)
போன்றவைகளுக்கு தனி தனி பகுதியாக பிரிக்கப்பட்டிருந்தது (கி.மு. இரண்டாம் நூற்றூண்டில்
எழுதப்பட்ட மதுரை காஞ்சியில் உள்ளது). இன்றும் கிழக்கு பகுதி தானிய பொருள் கடைகள்,
தெற்கே நகை கடைகள், மேற்கே 1980 வரை பரத்தியர் இருக்கும் இடமாக இருந்தது, மற்றும்
வடக்கே குடியிருப்பு பகுதியாக உள்ளது.
மதுரை நகர் கி.பி.1168ல் அதன் விரிவாக்கத்துக்கு முன், கோட்டை சுவரும்,
அகழியும் விடுத்து அதன் மொத்த பரப்பளவு 0.4779 சதுர கி.மீ. மற்றும் அதன் நீளம்
கிழக்கு – மேற்கு, மற்றும் வடக்கு – தெற்கு 2268 அடியாகும் (GIS map or google earth
அதன் tools கொண்டு அளக்கலாம்).
மதுரையின் தெய்வம் சிவன் (மதுரை காஞ்சி) நகரின் சரியான மையத்தில் உள்ளார். அவர்
மதுரையின் தலைவாயில் அமைந்த (தற்சமயம் கிழக்கில் சாமி சன்னதி – பூக்கடை தெரு,
மேற்கில் மேல கோபுர தெரு) தெருவில் சரியாக நடு மையத்தில் உள்ளார். கிழக்கில்
சிவனுக்கும் கோட்டை வரை (தற்சமயம் விட்டவாசல்) 1134 அடி உள்ளது, அதே மாதிரி மேற்கிலும்
1134 அடி. இப்பொழுதும் மேற்கில் மேல பாண்டியர் கோட்டை அகழ் தெரு (திண்டுக்கல் ரோடு
மாப்பிள்ளை விநாயகர் சோடா அருகில்) இருக்கிறது. சிவனிலிருந்து இத்தெரு வரை 1064
அடியும், தெருவின் அகலம் 28 அடியும், கோட்டை கொத்தளம் 42 அடியும் சேர்த்தால் 1134
அடி (GIS
Map).
குலசேகர பாண்டியன் காலத்தில் (கி.பி.1168-75), நகர் வட புறத்தில் வைகை இருந்ததால்
அதை விடுத்து மற்ற திசைகளில் விரிவாக்கப்பட்டது (திருவாலவாயுடையார் திருப்பணி
விவரம், திருப்பணிமாலை, சீதளப் புத்தகம் முதலியவற்றினின்று தொகுக்கப்பட்ட்து – ‘மதுரை அருள்மிகு மீனாட்சி
சுந்தரேசுவரர் திருக்கோயில் தல வரலாறு’ – R.பஞ்சநதம் பிள்ளை). அவர் மற்ற
மூன்று திசைகளிலும் 1134 அடி விரிவுபடுத்தினார். மேலும் அவர் சுவாமி கோவிலுக்குள்
அர்த்த மண்டபம், மகாமண்டபம் மற்றும் சுவாமி சன்னதிக்கு மேல் கோபுரம் கட்டினார்.
குலசேகர பாண்டியன் சுமார் 1500 ஆண்டுகள் 28 அடி X 28 அடி இருந்த சுவாமி சன்னதியை விரிவுபடுத்தினார். சுவாமி சன்னதியின்
கர்ப்பகிரகம் உபபிடம் சேர்த்து 33 அடி x 33 அடி உள்ளது (‘Madurai through the ages’ – Dr.(Miss) D. Devakunjarai, M.A., M.Ed., Ph.D –
Thesis submitted to the Universsity of Madras in 1957, - Arulmegu Meenakshi Sunareswarar
Thirukkoil). அது அடிசதானம் மட்டும் 28 அடி x 28 அடியாக இருக்கும். அவர் பழைய
மதுரையின் தெரு அகலம், கட்டிட மனையின் நீள, அகலம் மற்றும் 14゚கோணம் மாறாமல்
விரிவாக்கத்திலும் அதே அளவுகளைக் கொண்டு அமைத்தார்.
பாண்டிய கோட்டைக்கும், நாயக்கர் கோட்டைக்கும் கோண வித்தியாசத்திற்கு காரணம்
Courtesy: Madras district gazetteers - Madura vol.I
1757ல் வரைப்படத்தில் வடக்கு, கிழக்கு 14゚கோணத்தில் உள்ளது. மேற்கு,
தெற்கும் 90゚கோணத்தில் உள்ளது. தெற்கு கோட்டை சுவர் கிழக்கு சுவரோடு சேரும் இடம் ‘ட’
வடிவில் இருப்பதற்கு காரணம், இரண்டும் வெவ்வெறு கோணத்தில் இருப்பதுதான்.
இதற்கு காரணம், மதுரையின் தெற்கும், மேற்கும் பாண்டிய நாட்டை சேர்ந்த பகுதி. கிழக்கேயும்,
வடக்கேயும் இருந்தே படையெடுப்பு யாவும் இருக்கும். ஆதலால் இக்கோட்டை சுவர்கள்
நன்கு பராமரிக்கப்பட்டது.
மற்றெரு காரணம் கி.பி.1310ல் முகமதியர் படையெடுப்புக்கு பின், மதுரை மக்கட்
தொகை வெகுவாக குறைந்துவிட்டது. எஞ்சிய மக்கள் வடக்கு, மற்றும் கிழக்கு
பகுதியிலும், மேற்கே சிலரும் இருந்தனர். மதுரையின் தலை வாசல் கிழக்கிலும்,
குடியிருப்பு பகுதி வடக்கே இருந்ததே இதற்குக் காரணம். இதனால் தெற்கேயும்,
மேற்கேயும் மரங்கள் வளர்ந்து காடு போல் இருந்தது (A
Geographical, Statistical and Historical Description of Hindustan, and the
Adjacent Countries, Vol. II, by Walter Hamilton ESQ) Google Earth வரைபடத்தில் வடக்கேயும், கிழக்கேயும் பல தெருக்களும், கட்டிடங்களும்
14゚ கோணத்தில் இருப்பதைக்
காணலாம். அதே மாதிரி தெற்கேயும், மேற்கேயும் எல்லா தெருக்களும், கட்டிடங்களும் 90゚கோணத்தில் இருப்பதைக்
காணலாம். மேற்கே மட்டும் சில தெருக்கள் 14゚கோணத்தில் உள்ளன.
விசுவநாத நாயக்கர் (கி.பி.1532-64) பழைய கோட்டை மற்றும் அகழியை அழித்து புதிய
இரட்டை சுவர் கோட்டை கட்டினார் (1)History of the Nayaks of Madura by S.Krishnasamy Iyer,
2)Madura, a tourist’s guide by Anon.Thomas, 3)Madras district gazetteers –
Madura vol.I by W.Francis ICS). மதுரை நகர் அமைப்பு பற்றி நாயக்க மன்னர்களுக்கு, அவர்கள் அயலிலிருந்து
வந்ததால் தெரிந்திருக்கவில்லை. மக்கள் வசிக்கமால் காடு மாதிரி இருந்த மேற்கு
மற்றும் தெற்கு கோட்டை சுவரை இடித்து புதிதாக சரியான திசையில் (கோணம் இல்லாமல்)
கட்டினார். மேலும் வடக்கு மற்றும் கிழக்கு ஏற்கனவே இருந்த கோட்டை சுவர் அருகில்
புதிதாக இரண்டாவது கோட்டை சுவர் கட்டினார். இதன் காரணமாகவே கோண வித்தியாசமும், ‘ட’
வடிவமும்.
Prabhakaran, oru poriyalar paarvaiyil maduraiai kaatta muyalgireergal...koodal peyar kaaranam confluence of rivers thavirtthu veru ethavathu ullatha enbathu kuritthu aarayalam....naicker kaalatthil makkal kudiyetram nadanthath enil athan kaaranam paguthigal kuritthu ezhuthalam.melum yaanaimalai, pasumalai, nagamalai kurittha kurippugal peyar kaaranam ilakkiya chanru irunthal tharavum. Madurai aaivukku vaazhtthukkal.......T.K.HARIHARAN
பதிலளிநீக்குT.K.Hariharan, தங்கள் வாழ்த்துக்கு நன்றி. கூடல் என்பதற்கு வேறு பெயர் காரணம் இருக்க வாய்ப்பில்லை. கி.பி.1300 லிருந்து நிலையில்லா தன்மையால் குடிபியர்ந்த மக்கள், நாயக்கர் காலத்தில் நிலையான ஆட்சியால் மீண்டும் குடியேரினர். மதுரையை சுற்றியுள்ள மலைகளுக்கு பெயர் காரணம் தெரியவில்லை.
நீக்கு