நான் கூறும் மதுரை வரலாற்று தகவல்களை வேறு இடத்தில் தாங்கள் பயன் படுத்தும் பொழுது, 'தகவல்கள் மூலம் பிரபாகரன் கே.' என்று குறிப்பிடவும்.

வெள்ளி, 30 ஜனவரி, 2015

மதுரையின் நகர் அமைப்பு – பாகம் 3



மதுரையின் அடிப்படை அமைப்பின் தொடர்ச்சி ....

மதுரை தலைவாயில் தெரு சுவாமி சன்னதி-பூக்கடை தெருவின் வடபுறமும், தென்புறமும், இரண்டாவது sector  42 அடி அகலம் கொண்டது. வடபுறத்தின் மூன்றாவது sector,  இரண்டாவது block -  அதாவது இன்றைய மீனாட்சி பூங்கா, அரண்மனையாக இருக்க வாய்ப்புள்ளது (இந்த வாதத்தை உறுதி செய்ய இங்கு அகல்வாராய்ச்சி செய்யலாம்). அரண்மனையைச் சுற்றி அனைத்து தெருக்களும் 56 அடி அகலம் உள்ளதாக இருக்கிறது. இந்த மூன்றாவது sectorல் அனைத்து வீடுகளும், மந்திரிகள் மற்றும் பெரிய வியாபாரிகள் வீடுகளாக இருக்கலாம். இரண்டாவது sector 42 அடியாக இருப்பதால், அதில் பொது கட்டிடங்கள் ஆகிய, வழக்குரை மன்றம், அறிஞர்கள் கூடும் அவை, அரசாங்க தாணிய கிடங்கு, காவல் நிலையம், ஆவணக் காப்பகம், உணவகம், சத்திரம் முதலியவை இருந்து இருக்கலாம். தென்புறம் உள்ள 42 அடி இரண்டாவது  sectorல் புத்த கோவில், வேதம் ஒதும் மக்களின் இருப்பிடம், சமண துறவிகளின் இருப்பிடம், தங்க நகைப் பட்டறை, முத்து, வைரம் முதலிய கற்கள் விற்கும் கடைகள் மற்றும் சத்திரமும், உணவகமும் இருந்து இருக்கலாம் (மதுரை காஞ்சி).

வடபுறம் மூன்றாவது sectorலிருந்து 9வது sector வரை குடியிருப்புப் பகுதியாக இருக்கலாம் (இன்றும் வடக்கு சித்திரை வீதியிலிருந்து வடக்கு மாசி வீதி வரை குடியிருப்பே). நகரின் கிழக்கு பகுதி தாணிய வியாபார கடைகளாக இருக்கலாம் (இன்றும் கீழமாசி வீதி உணவு பொருள் கடைகள்).

தென்புறம் மூன்றாவது blockக்கு பின் இரும்பு வார்ப்படம் செய்பவர்களும், படை வீரர்கள் மற்றும் ஏழைகளின் வீடுகளாக இருக்கலாம். மேற்கே  ஆறாவது block க்கு பின் சுண்ணாம்பு தயாரிப்பவர்களும், விலைமாதர்களும் இருந்து இருக்கலாம் (1980 கடைசி வரை சென்ட்ரல் தியேட்டர் மற்றும் இரயில் நிலையம் வரை விலைமாதர்கள் அதிகம்).

ஜந்தாவதிலிருந்து ஏழாவது  sector வரை ஏழாவது  block ல் (தற்சமயம் YMCA எதிர்ப்புறம் உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டி, கார்ப்ரேசன் வரி வசூல் மையம் அமைந்த இடம்) போர் யானைகளும், கருவிகளும், வீரர்களும் இருக்கும் படைத் தளமாக இருக்கலாம் (கி.பி. 1700 களில் பிரிட்டிசாரின் இரணுவ barrack ஆக இருந்தது).

வடக்கே நான்கிலிருந்து ஆறாவது  sector வரை மூன்று, நான்காவது block ல் (தற்பொழுது இடிக்கப்பட்ட சென்ட்ரல் மார்க்கெட்) நாளங்காடியாக (மதுரை காஞ்சி) இருந்து இருக்கலாம் (இங்கு அகல்வாராய்ச்சி செய்யலாம்).

ஆதலால் மதுரையின் கட்டிடங்கள் யாவும் 42 அடி x 42 அடியாகவும், நகரின் தலைவாயில் வடபுறமும், தென்புறமும் உள்ள இரணடாவது  sector மட்டும் 21 அடி x 21 அடி அல்லது 42 அடி x 42 அடி என்று அதன் பயன்பாட்டை பொறுத்து இருந்து இருக்கும். ஆக மொத்தம் 9 blocks மற்றும் 18 sectors ம், நகரை சுற்றி 42 அடி போர் கருவிகள் கிடங்கும் இருந்து இருக்கும். அரண்மனை, நாளங்காடி மற்றும் படைத்தளம் தவிர்த்து மொத்தம் 1202 வீடுகள் இருந்து இருக்கும். மதுரையின் பொற்காலமாகிய தலையாங்கானத்து செறுவென்ற நெடுஞ்செழியன் (கி.மு 175-150 – ‘சங்க கால மன்னர்களின் கால நிலை’ பத்மஜா ரமேஷ், V.P.புருஷ்த்மன்) காலத்தில் மதுரை மக்கள் தொகை 20000 ம், வந்துபோகும் மக்கள் தொகை 5000ம் இருந்து இருக்கும். மற்றபடி மதுரையைச் சுற்றி வெவ்வேறு படித்துறையருகில் சிறு சிறு குடியிருப்புகள் இருந்து இருக்கும்.

இன்றும் கிடைக்கும் ஆதாரங்கள்

இன்றும் சில கட்டிடங்களை நாம்  Google Earth ல் அளக்கலாம்  (அதில் உள்ள tools  பயன்படுத்தி). சுவாமி சன்னதி கர்ப்பகிரகத்தில் சரியாக சிவலிங்கத்திற்கு (கர்ப்பகிரகத்தின் கோபுர மத்தி) மத்தியிலிருந்து புதுமண்டபம் எதிரில் ராயகோபுரம் (அம்மன் சன்னதி விட்டவாசல்) வரை 1134 அடி யிருக்கும். இதே மாதிரி மேற்கே அளந்தால் மேல பாண்டியர் கோட்டை அகழ் தெரு (ராஜா பார்லி எதிரில்) வரை 1064 அடியும், தெரு அகலம் 28 அடியும் போர்க்கருவி கிடங்கு 42 அடி சேர்த்தால் 1134 அடி.

With my markings - Center of Sivan (yellow line)

இதே மாதிரி மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு சித்திரை வீதிகள் ஏறத்தாழ 56 அடி அகலமும், 14கோணமும் இருந்து, மதுரையின் ஆரம்பகால அமைப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

சுவாமி சன்னதியின் கர்ப்பகிரகம் உபபீடம் சேர்த்து 33 அடி x 33 அடி உள்ளது (‘Madurai through the ages’ – Dr.(Miss) D. Devakunjarai, M.A., M.Ed., Ph.D – Thesis submitted to the Universsity of Madras in 1957,  - Arulmegu Meenakshi Sunareswarar Thirukkoil). அது அடிஸ்தானம் வரை 28 அடி x 28 அடியிருக்கும். இது ஆரம்பகால அமைப்பின் அளவை உறுதிப்படுத்துகிறது.

மதுரையின் தலை வாயில் தெரு 84 அடியாகும். கோவில் விரிவாக்கத்திற்கு முன் (கி.பி.1185) தெருவாக இருந்த இடத்தில் சுவாமி சன்னதி கர்ப்பகிரகத்திற்கு எதிரில் கட்டிய மகாமண்டபம் 55 அடி x 85 அடி (‘Madurai through the ages’ – Dr.(Miss) D. Devakunjarai, M.A., M.Ed., Ph.D – Thesis submitted to the Universsity of Madras in 1957,  - Arulmegu Meenakshi Sunareswarar Thirukkoil). 1 அடி வித்தியாசம் முகமதியர் படையெடுப்பில் இடிந்த பகுதியை மாவலிவாணாதிராயர் செப்பனிடும்பொழுது வந்ததாக இருக்கும்.

கோவில் வளாகம் அதுவும் குறிப்பாக சுவாமிசன்னதி பகுதியும், புதுமண்டபமும், மற்றும் விட்ட வாசலும் 14கோணத்தை கொண்டுள்ளது. மேலும் கோவில் அருகிலும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பெரும்பாலும் இக்கோணத்தை காணலாம். மேலும் அனேக தெருக்கள் ஆரம்ப கால தெரு அமைப்போடு ஒத்து போகிறது.

 Without my markings - see the temple and north and east side buildings in angle



14ம் நூற்றாண்டுக்கு பின் புதிய தெருக்கள்

கி.பி. 1532ல் விஷ்வநாத நாயக்கர், மதுரையில் நாயக்கர்கள் ஆட்சியை உண்டாக்கினார். அச்சமயம் தொடர் படை எடுப்புகளால் மதுரையின் மக்கள் தொகை வெகுவாக குறைந்திருந்தது. எஞ்சிய மக்கள் நகரின் வடபகுதியிலும், கிழக்கு பகுதியில் மட்டுமே இருந்தனர்.

விஷ்வநாத நாயக்கர் புதிய அமைப்பு உருவாக்கி அதன்படி தெருக்கள் அமைத்தார் (‘Madura, a tourist's guide’ by Anon Thomas). அவர் மதுரையின் நகர் அமைப்பு தெரியாததால், புதிய தெருக்கள் மற்றும் கட்டிடங்களை சரியான வட, கிழக்கு திசையில் அமைத்தார். நகரின் தெற்கிலும், மேற்கிலும் மக்கள் வசிக்காததால், அங்கு அவரின் புதிய நகர் அமைப்பை உருவாக்கினார். இப்புதிய தெருக்கள் வடக்கிலும், கிழக்கிலும் உள்ள பழைய 14 கோண தெருக்களோடு இணையும் பொழுது, இணையும் இடம் திருகலாக அமைந்தது.

12ம் நூற்றாண்டு அதன் விரிவாக்கத்திற்கு பின்னும், கோணத்தோடும் ஆரம்பகால தெரு அகலத்தோடு இருந்த நகர், இப்புதிய நகர் அமைப்பால்,தெற்கிலும், மேற்கிலும் முற்றிலுமாக தன் அமைப்பை இழந்தது. இதுவே மதுரை நகர் அமைப்பு.



செவ்வாய், 27 ஜனவரி, 2015

மதுரையின் நகர் அமைப்பு – பாகம் 2



மதுரையின் அடிப்படை அமைப்பு -  கட்டிடப் பகுதிகள் (Sectors), கட்டிடத் தொகுதிகள் (blocks)

மதுரைக் கோவிலின் சுவாமி சன்னதி இன்றும் அதன் மூலக்கோணம் 14 மற்றும் அதன் கர்ப்பகிரகம் 28 அடி x 28 அடி தக்கவைத்துக் கொண்டுள்ளது. குலசேகர பாண்டியன் சுவாமி சன்னதியை பெரிய கோவில் வளாகமாக மாற்ற எத்தனித்த பொழுது அவர் நகரின் மூல அமைப்பு படி 14கோணத்தையும், தெருக்கள் அகலம் மற்றும் மனையின் அளவுகள் மாறாமல் நீட்டித்த பகுதியை வடிவமைத்தார். மேலும் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி.1216-1238) சவாமி கோவில் 9 நிலை கோபுரமும் மற்றும் சுவாமி கோவில் திருமாறன் மதில் சுவர் கட்டும்பொழுது 14கோணத்தை கடைப்பிடித்தார் ((திருவாலவாயுடையார் திருப்பணி விவரம், திருப்பணிமாலை, சீதளப் புத்தகம் முதலியவற்றினின்று தொகுக்கப்பட்டது – மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தல வரலாறுR.பஞ்சநதம் பிள்ளை & GIS map).

கி.பி.1310 – 1370 ல் முகமதியர் ஆட்சியின் பொழுது, பல கோவில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. பின்னால் அவைகளை சீரமைக்கும் பொழுது, பழைய அஸ்திவாரத்தில் மீதே கட்டப்பட்டதால், 14 கோணத்தை தக்கவைத்துக் கொண்டது. ஆரம்ப காலத்திலிருந்தே நகரின் வட பகுதி குடியிருப்பாக இருந்தது. பல படையெடுப்புகளால் பெரும்பாலான மக்கள் நகரை விட்டு வெளியேறினர். பின் குடியேரும் பொழுது, பல தெருக்களை ஆக்கிரமித்து, தெருக்கள் அகலம் சுருங்கியும், சில தெருக்கள் மறைந்தும் போனாலும், இன்றும் பல தெருக்களும், பழைய கட்டிடங்களும் 14கோணத்தோடு உள்ளன. கோவில் அருகில் உள்ள பல தெருக்களும், பழைய கட்டிடங்களும் மற்றும் புது மண்டபமும்,  இன்றும் 14 கோணத்தோடு உள்ளது (GIS Map).

எல்லா தெருக்களின் அகலம் 14ன் பெருக்குத் தொகையாக உள்ளன. சிறிய தெருக்களின் அகலம் 28 அடியும், பெரிய தெருக்களின் அகலம் 56 அடியும் உள்ளன. மதுரையின் தலைவாயில் தெரு சுவாமிசன்னதி – பூக்கடை தெரு 84 அடியாக இருந்தது. இது சுவாமி கோவிலின் மகா மண்டபம் அளவான 55 அடி x 85 அடி கொண்டு உறுதிப் படுத்தலாம் (‘Madurai through the ages’ – Dr.(Miss) D. Devakunjarai, M.A., M.Ed., Ph.D – Thesis submitted to the Universsity of Madras in 1957,  - Arulmegu Meenakshi Sunareswarar Thirukkoil). ஒரு அடி வித்தியாசம் கி.பி.1452ல் மாவலிவாணாதிராயர் ((திருவாலவாயுடையார் திருப்பணி விவரம், திருப்பணிமாலை, சீதளப் புத்தகம் முதலியவற்றினின்று தொகுக்கப்பட்டது – மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தல வரலாறுR.பஞ்சநதம் பிள்ளை), இடிபாடுகளை திரும்பக் கட்டும் பொழுது வந்ததாக இருக்கும்.

 Courtesy: Temple Plan of Madurai Temple - Madras district gazetteers - Madura volI



நகர் விரிவாக்கத்திற்கு முன் இருந்த பாண்டியர் கோட்டையின் எஞ்சிய பகுதியாகிய, அம்மன் சன்னதி வீதியில் உள்ள விட்டவாசல் 14 அடி அகலமும், 14 கோணமமும் உள்ளதை Google Earth ல் அளந்து பார்க்கலாம். அதாலால் கோட்டையின் அகலம் 14 அடியும், அகழியின் அகலம் மற்றும் ஆழம் 28 அடியாக இருக்க வாய்ப்புள்ளது. Walter Hamilton ESQ அவரின் புத்தகத்தில் (A Geographical, Statistical and Historical Description of Hindustan, and the Adjacent Countries, vol. II) அகழியில் நீர் 1806 ல் 20 அடி கீழ் இருந்ததாகவும், 1810 ல் தொடர் மழைக்குப் பின் 3 அடி கீழ் இருந்ததாகவும் கூறுகிறர். இது 28 அடி ஆழம் என்ற ஊகத்தை உறுதிப் படுத்துகிறது.

கீழ்கண்டவற்றித்கு என்னுடைய CAD வரைப்படத்தையும், GIS map அல்லது Goolge Earth யையும் பார்க்கவும். கிழக்கிலிருந்து மேற்கே, கோட்டை சுவருக்கு பின் 42 அடி ஆயுதக் கிடங்காக இருந்திருக்கும் (விட்டவாசல் அடுத்து டீக்கடை மற்றும் கண்ணாடிக் கடைகள் உள்ள சிறு பகுதி – இதற்கு பின் கீழஆவணி மூல வீதி). இதற்கு அடுத்து முதல் குறுக்கு தெரு 28 அடி அகலம். இதன் பின் முதல் கட்டிட தொகுதி (block) 126 அடி நீளம், பின் இரணடாம் தொகுதி 168 அடி, மூன்றாம் தொகுதி 294 அடி, நான்கு மற்றும் ஜந்தாம் தொகுதி 168 அடியாகவும் உள்ளது. ஜந்தாம் தொகுதியின் நடுப்பகுதியில் அதாவது நகரின் சரியான மையப்பகுதியில் சுவாமி சன்னதி உள்ளது. சிவனை நடு மையமாக வைத்து நகர் உருவாக்கப்பட்டது. சுவாமி சன்னதி 28 அடி x  28 அடியாகும். முதல் 28 அடி குறுக்கு தெருவுக்கு பின் வரும் குறுக்குத் தெருக்கள் யாவும் 56 அடியாகும். ஆறிலிருந்து ஒன்பது வரையுள்ள தொகுதிகள் (blocks) முதல் நான்கு தொகுதிகள் மாதிரி முறையே 126, 168, 294, 168 அடி நீளமாக இருக்கும்.

 Madurai Plan - K.Prabhakaran



இந்த கட்டிட தொகுதிகள் யாவும் (blocks)  கீழ்மேல் செல்லும் தெருக்களால் sectorஆக பிரிக்கப்படுகிறது. மதுரையின் தலைவாயில் தெரு கீழ்மேல் செல்லும் சுவாமி சன்னதி – பூக்கடை தெரு 84 அடி அகலம் கொண்டது. இத்தெருவிற்கு அடுத்து வடபுறம் வரும் முதல் sector 84 அடியும் அதற்கு அடுத்து வரும் தெரு 28 அடியாகவும் உள்ளது. இத்தெருவிற்கு அடுத்து வரும் 2வது sector 42 அடி அகலமும், அதன் பின் வரும் தெரு 56 அடியாகவும் உள்ளது ( இத்தெரு - இடிக்கப்பட்டு, வணிக வளாகமாக கட்டப்படும் இடமும், எழுகடல் அக்ரகாரமும்). இதற்கு பின் வரும் மூன்றாவது  sectorலிருந்து ஒன்பதாவது  sector வரை அனைத்து sectorயும் 84 அடி அகலமும், மூன்றாவது மற்றும் நான்காவது sectorக்கு பின் வரும் தெரு 56 அடி அகலம் கொண்டதாகவும் உள்ளது. ஜந்தாவது  sector முதல் ஒன்பதாவது  sector வரை அதன் பின் வரும் தெருக்கள் யாவும் 28 அடி அகலம் உள்ளது. ஒன்பதாவது sectorக்கு பின் 28 அடி அகல தெருவும், ஆயுதகிடங்கும் அதன் பின் கோட்டையும் அகழியும் உள்ளது. இதே மாதிரி சுவாமி சன்னதி தெருவுக்கு தெற்கேயும் 9 sectorம் ஆயுதகிடங்கும் உள்ளது.

மொத்தம் 9 தொகுதியும் (blocks) 18 sectorம், நான்கு பக்கமும் ஆயுதகிடங்கும், கோட்டை, அகழியும் உள்ளது. இவ்வாறே மதுரை நல்ல நகர அமைப்போடு, அழகாக வடிவமைக்கப்பட்டது. 

குறிப்பு: High resolution  வரைபடத்திற்கு என்னை அனுகவும்.