நான் கூறும் மதுரை வரலாற்று தகவல்களை வேறு இடத்தில் தாங்கள் பயன் படுத்தும் பொழுது, 'தகவல்கள் மூலம் பிரபாகரன் கே.' என்று குறிப்பிடவும்.

செவ்வாய், 19 மே, 2015

நீர் மேலாண்மை – water management



இப்பொழுது பரவலாக பேசப்படுவது நீர் மேலாண்மை, watershed programme  போன்ற வார்த்தைகள். ஆனால் சங்ககாலத்திலேயே இம்மாதிரி technical வார்த்தைகள் இல்லாமல் நம் முன்னோர்கள் நீரை judicialஆக பயன்படுத்தினார்கள்.

சேர நாடு நீர் நிறைந்த (கேரளத்தின் பெரும்பகுதி உள்ளடக்கியது) பகுதி. சோழ நாடு வற்றாத காவிரி உள்ள ஒன்று. பாண்டிய நாட்டில் தாமிரபரணி வற்றாத நதி. ஆனால் வைகை ஒரு காட்டாறு. வருடத்தின் பெரும் பகுதி நீர் இருக்காது. பாண்டியர்களுக்கு நீர் மேலாண்மை அவசியமாகியது. அவர்கள் வைகையின் கீழ் பகுதியில் (தென் கரை பகுதி) தொடர் நீர் நிலைகளை ஏற்படுத்தினார்கள். அதாவது ஒரு கண்மாய் நிறைந்தால் அதிக நீர் வெளியேறிஅடுத்த கண்மாய் நிறையும். இதை வைகையின் அதிக வெள்ள நீரை கொண்டு செய்தார்கள். இது விருதுநகர், இரமாநாதாபுரம் மாவட்டங்கள் பயன் படும்படி அமைத்தார்கள். இதில் திருமங்கல்ம், அருப்புகோட்டையில் ஒடும் நதியோடு இணைத்தார்கள்.

மேலும் வைகையின் வடக்கு பக்கம் மேற்கு தொடர்ச்சி மலை, சிறுமலையில் வடியும் மழை நீரை தொடர் கண்மாய்களில் தேக்கி, அதிக நீர் ஆங்காங்கே வைகையில் வடிவதற்கு வழி செய்துள்ளார்கள். ஆக வைகையின் வடபுறம், தென்புறம் இருபக்கமும் தொடர் கண்மாய்களும், வடபக்கம் கண்மாய்கள் அதிக நீரை வைகையில் கலக்க அது தென்புறகண்மாய்கள் நிறைய வழி செய்துள்ளார்கள். மேலும் வைகை நதியை மற்ற சிறிய நதிகளோடு இணைத்துள்ளார்கள்.

மதுரை நகருக்குள் கிருதுமாலும், வைகையும் மாலை போல் சூழ்ந்து, நீர் நிறைந்திருந்தது. ஆனால் கண்மாய்களின் முக்கியத்துவம் தெரியாமல் 60- 70களில் மத்திய பஸ்நிலையும், மாவட்ட நீதிமன்றம், வானொலிநிலையும், சட்டக்கல்லூரி, வக்போர்ட் கல்லூரி, வணிகவரி அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், கட்டியுள்ளோம். இன்றும் நீர் தட்டுபாடு ஏற்பட்ட பின்பும் நாம் பாடம் கற்கவில்லை. உயர்நீதிமன்ற மதுரை கிளை, உலக தமிழ் சங்கம் கண்மாய்களில் அமைந்துள்ளது. இது போக கண்மாய்களை இணைக்கும் வரத்து கால்வாய்கள், கண்மாய்களின் கரையோரங்களை ஆக்கிரிமிப்பது, ரோடு அகலப்படுத்த கால்வாய்களை குறுக்குவது போன்ற செயல்களை செய்கிறோம். வைகை ஆற்றையும் குறுக்கி ரோடு போடப்பட்டுள்ளது.

இன்று talk of the town – smart city.  இதைதானே 1000 வருடம் முன் மதுரையை ஆண்டவர்கள் செய்தார்கள். கோவிலை விரிவுபடுத்த நினைத்த பொழுது, அவர்கள் முதலில் செய்தது நகரை விரிவுபடுத்தியது. ஆதாவது இருக்கும் infrastructureக்குல் குண்டு சட்டி ஒட்டாமல், நகரை விரிவுபடுத்தி பின் கோவிலை விரிவுபடுத்தினார்கள். இன்று நாம் இருக்கும் infrastructureஐ விரிவுபடுத்தாமல் கட்டடங்களைக் கட்டுகிறோம். எ.க. - ராஜாஜி மருத்துவமனை விரிவாக்கத்தை அதே ரோட்டில் கலெக்டர் ஆபிஸ் பஸ் நிலையத்தில் கட்டினார்கள். தற்சமயம் அதன் எதிர்புறம் மற்றுமொரு விரிவாக்க மருத்துவமனை கட்டுகிறர்கள். இக்கட்டடங்களால் இந்தரோட்டில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு, மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு, சாக்கடைநீர் அதிகரிப்பதற்கு தகுந்தார்போல் underground drainage redesign, குடிநீர், மருத்துவகல்லூரி மைதானத்திற்கு மாற்று இடம், பஸ்நிலையத்திற்கு மாற்று இடம் என்று எதுவும் கிடையாது.

மதுரை நகருக்குள்ளும், சுற்றிலும் உள்ள விரிவாக்க பகுதிகளிலும் கண்மாய்களும், கால்வாய்களும் ஒடுவது மதுரையின் நிலத்தடி நீர் குறையாமல் இருக்க உதவக்கூடிய ஒன்று. ஆனால் இன்று நாம் அதை சாக்கடை நீர் செல்லும் ஒரு கழிவு நீர் கால்வாயாக மாற்றியுள்ளோம். நீண்ட தூரம் நிலத்தடியில் குழாய் பதித்து மத்திய கழிவுநீர் சுத்தகரிப்பு ஆலைக்கு (Effluent Treatment Plant) எடுத்து செல்வதால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. குழாய் அடைப்பு, pumping station மோட்டார் பிரச்சனை என்றுள்ளது. இதற்கு பதில் சிறு சிறு கழிவு நீர் ஆலை அந்தந்த பகுதிகளில் நிறுவி, சுத்திகரிக்கப்பட்ட நீரை இக்கால்வாய்களிலோ அல்லது வைகையிலோ விடும் பொழுது நிலத்தடி நீரும் உயரும், மறுசுழற்சி நீர் கால்வாய்கள் மூலம் கண்மாய்களை நிறைக்கும் பொழுது, விவசாயம் நடக்கும் பகுதிகளில் அதை பயன் படுத்த முடியும்.

வியாழன், 30 ஏப்ரல், 2015

Architectural History – கட்டிட கலை சரித்திரம்



அமெரிக்காவில் Society of Architectural Historians என்ற அமைப்பு உள்ளது. அது பண்டைய கட்டிட வடிவமைப்பைப் பற்றி அறிவதும், பழைய கட்டிடங்களை புதுப்பிப்பதற்குமான அமைப்பு. அது அமைந்து இருக்கும் கட்டிடம் 1840களில் கட்டப்பட்டது. அதையே அவர்கள் மிக போற்றுவதற்கு உரிய ஒன்றாகக் கருதுகிறர்கள். ஆனால் நாமோ 2500 பழமையான கோட்டை சுவரின் எஞ்சிய பகுதியான – அம்மன் சன்னதி வீதியில் உள்ள விட்டவாசலை ஆக்கிரமித்தும், அதை மறைத்தும் மாறுதல்கள் செய்கிறோம். 300 வருட பழைமையான ராயர் கோபுரத்தை மறைத்து கடைகளும்,  அதன் எதிரிலிருந்த வசந்தன் குளம் என்ற ராவுண்டானாவை இடித்து நந்தி கட்டி மகிழ்கிறோம். 200 வருட பழமையான கீழமாசி வீதி போலிஸ் ஸ்டேஷ்னை இடித்து நவீன கட்டிடம் கட்டுகிறோம்.

உலகில் எந்த நகரத்தையையும் விட பழமையான நகரான மதுரையின் நகர அமைப்பு வியக்க வைக்கும் வகையில் உள்ளது. தெருக்களின் அகலம் 56 அடி என்பது 2500 வருடம் முந்தையை காலகட்டத்தின் அளவு கோள்படி அகலாமான தெரு. இது அவர்களின் எதிர்கால போக்குவரத்தை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டதை காட்டுகிறது. குறுக்கும், நெடுக்கும் ஒன்றுக்கு ஒன்று இணையான (parallel) தெருக்களும், செக்டாராகவும், பிளாக்காகவும், தெருக்களும், பிளாக்குகளும் 14ன் பெருக்குத்தொகையில் இருப்பது – அவர்கள் வடிவமைப்பில் காட்டிய கவனம் தெரிகறது.

இப்பொழுது நாம் எதற்கு எடுத்தாலும் மேற்கு நாடுகளே சிறந்தது என்ற கருத்தில் கண்ணை மூடி ஏற்று கொள்கிறோம். உதாரணமாக சென்னையில் உள்ள பசுமை தீர்ப்பாயம் (green tribunal) அமைந்திருக்கும் கட்டிடம். அக்கட்டிடம் முழுவதும் பளபளக்கும் (கண்ணடியா அல்லது ACP sheet என்று தெரியவில்லை) ஒரு பொருளால் உள்ளது. நமது நாடு வெப்ப பிரேதசம் – குளிர் பிரேதசம்யல்ல. இந்த வடிவமைப்பு கட்டிடத்தின் உள்புறம் வெப்பமாக வைத்து இருக்கும். இது குளிர் பிரேதசத்திற்கு சரி, ஆனால் வெப்ப பிரேதசமாகிய நமது நாட்டில் உள்பகுதி அதிக வெப்பமாக இருக்கும். குளிர் சாதனம் இல்லாமல் இருக்க முடியாது. அதாவது அதிக சக்தி வேண்டும் (energy consumption). Energy ineffiecent கட்டிடம் கட்டி, பின் அதிக மின் தேவையுள்ளது ஆதலால் மின் தேவையை பூர்த்தி செய்ய அனுமின் அவசியம் தேவை என்று கூறித் திரிகிறோம்.

ஆனால் நமது கட்டிடக்கலை இயற்கையோடு ஒன்றியது. அதிக காற்று ஒட்டத்துக்கு பெரிய சன்னல்கள், சிமிண்ட்டிற்கு பதில் சுண்ணாம்பு, மேற்கு வெய்யிலின் உக்கிரத்தை (உச்சி வெயிலை விட மேற்கு வெய்யில் கட்டிடத்தை மிக சூடாக ஆக்கும்) குறைக்க உயர்ந்து வளரக்கூடிய மரங்கள், கட்டிடத்தின் முன்பகுதியில் (முடிந்தால் சுற்றிலும்) தின்னை (இது வெப்ப தடுப்பான் – air curtain) இவ்வாறு பல தொழில் நூட்பங்கள் நாம் பின்பற்றி வந்தோம். தின்னை வைக்கமுடியாத கட்டிடங்களில் பால்கனியும், sun shadeம் இருக்கும். மதுரை மாநகராட்சி 1995 (வருடம் சரியாக நினைவில்யில்லை) வருடம் வரை தட்டி வரி அல்லது sunshade வரி என்று வசூலித்து வந்தது. அப்பொழுதையை போலிஷ் கமிஷனர் கீழமாசி வீதி போன்ற வர்த்தக வீதிகளில் ஆக்கிரமைப்பை அகற்றுவதாகக் கூறி இந்த sun shadeயேயும் அகற்றினார். இது நம் கட்டிட கலையின் தன்மையை அறியாததால் செய்யப்பட்ட செயல்.

பிரிட்டனில் பிறந்த இந்திய கட்டிட கலை வல்லுனர் Laurie Baker, திருவனந்தப்புறத்தில் வாழ்ந்து இயற்கையோடு ஒன்றிய கட்டிட கலையை வளர்த்தார். அவரின் அனுகுமுறை, உள்ளூரில் கிடைக்கும் மூல பொருள்களை அதிகம் பயன்படுத்துவது. ஆனால் அவரின் வடிவமைப்பு கேராளவில் சில இடங்களைத் தவிர வேறு எங்கும் பரவவில்லை.

கட்டிட வல்லுனர்கள், மேற்கு நாடுகளைப் பார்க்காமல், நம் வரலாற்றில் கட்டிட கலையை பார்க்கவேண்டும். மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோயில் கோபரங்கள் 1500ல் இடிபாடுகளை மீண்டும் கட்டி 500 வருடம் ஆகிறது, தஞ்சை பெரிய கோவில் கட்டி 1000 வருடம் ஆகிறது. இன்றும் இவைகள் நன்றாகவே உள்ளன. ஆனால் இப்பொழுது கட்டும் கட்டிடங்களுக்கு 50-60 வருடங்களே ஆயுள் காலம். பண்டைய கட்டிடங்களிலிருந்து structural design  மட்டுமல்ல, architectural designம் நாம் கற்றுகொள்ள எவ்வளவோ உள்ளன.