நான் கூறும் மதுரை வரலாற்று தகவல்களை வேறு இடத்தில் தாங்கள் பயன் படுத்தும் பொழுது, 'தகவல்கள் மூலம் பிரபாகரன் கே.' என்று குறிப்பிடவும்.

சனி, 25 ஏப்ரல், 2020

கொரோனா - அறிவியல் மற்றும் கடவுளர் கொள்கை - பகுதி 1



கொரோனா இன்று உலக மக்கள் யாவரையும்  பயமுறுத்தும் ஒரு தொற்று வியாதியாக உள்ளது. இந்த நோயினால் எல்லா நாடுகளும், சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தில், பாதிக்கப்பட்ட்டுள்ளது. இப்பொழுது அனைவரும்மூக இடைவெளி விட்டு, கூட்டம் கூடாமல் இருக்கவேண்டிய நிலையில் உள்ளார்கள். இதில், அதிகம் கூட்டம் கூடும் இடமாகிய அனைத்து மத கடவுள்களின் வழிபாட்டு தளங்களும் அடங்கும். 

முதலில் இந்நோய், மனிதர்களிடம் ஏற்ப்படுத்தி  ள்ள அச்சங்களின் வெளிப்பாடுகளையும், அடுத்தவர் மேல் குற்றம் சுமத்தும் மனப்போக்கையும் பார்ப்போம். சில இடங்களில் மருத்துவர்களை அவர்கள் வாடகைக்கு குடியிருக்கும் வீடுகளிலிருந்து வெளியேறச் சொல்வதும், இறந்த மருத்துவர்களை மரியாதையுடன் ஈம காரியங்களை செய்யவிடாமல், மிக மோசமாக நடத்துவதுமாக சிலர் உள்ளார்கள். மேலும் ஒரு நாடுதான் இந்த நோயை பரப்பியது என்றும், ஒரு மதத்தவர்தான் பரப்பினார்கள் என்றும் பலவித அவதூறுகள். இச்செயல்கள் யாவும் மிகுந்த மன வருத்தத்தைத் தரும் செயல்களாக உள்ளது.
இச்சமயத்தில் இதற்கு முன் உலகில் நடந்த இம்மாதிரியான நோய்களைப் பற்றிய சரித்திர நிகழ்வை சிறிது பார்ப்போம். பிளேக், காலரா, மலேரியா, அம்மை, போலியோ, எய்ட்ஸ், எபோலா, சார்ஸ் என்று பலநோய்கள். இதில் பிளேக் நோயின் வரலாற்றைப் பார்ப்போம்.

கி.பி 1347லிருந்து 1354 வரை கருப்பு சாவு (black death)  என்று அழைக்கப்பட்ட, பிளேக், ஜரோப்பிய கண்டத்தையே புரட்டிப் போட்டது. அது 1340 களிலேயே இந்தியா, சீனா, பாரசிகம், சிரியா மற்றும் எகிப்த்தை தாக்கியது. இந்த நோயால் ஜரோப்பாவில் சுமார் 3 கோடி மக்கள் இறந்தார்கள். இது ஆடு, மாடு மற்றும் கோழிகளையும் தாக்கியது. பதற்றம், அச்சம் காரணமாக மருத்துவர்கள் மருத்துவம் பார்க்க மறுத்தார்கள். மத குருமார்கள் இறந்தவர்களுக்கு ஈமச் சடங்குகளை செய்ய மறுத்தார்கள். வியாபாரிகள் தங்கள் கடைகளைத் திறக்க மறுத்தார்கள்.

இது கடவுளின் தண்டனை என்று கருதி, தங்கள் மதகோட்பாடுகளுக்கு மாற்று கருத்துள்ள பிற மதத்தவரை – குறிப்பாக யூதர்களைக் கொன்று குவித்தார்கள். மேலும் மததீவிர பற்றுள்ள – கசைநோன்பாளர்கள் (flagellants) கூர்மையான ஆணிகள் உள்ள கடினமான தோல் சவுக்கில் தங்களை தாங்களே அடித்துக் கொண்டார்கள்.

ஆனால் இம்மாதிரி எந்த செயலுக்கும் இந்நோய் கட்டுப்படவில்லை. கடைசியில் இவர்கள் நோய் கண்டவர்களை தனிமைப்படுத்தல், சமூக இடைவெளி போன்ற செயல்களால் இந்த நோயை கட்டுப்படுத்தினார்கள்.  

இதே பிளேக் செப்டம்பர் 1896ல் மும்பை, கொல்கட்டா போன்ற நகரங்களைத் தாக்கியது. மும்பையில் மட்டும் டிசம்பர் வரை, வார வாரம் 1900 மக்கள் இறந்தார்கள். மொத்தம் இந்தியாவில் 1 கோடி மக்கள் இறந்தார்கள். இதன் காரணமாக அப்பொழுதைய பிரிட்டிஷ் அரசின் கீழ் இயங்கிய சுகாதாரத்துறை, காவல்துறை உதவியுடன் நோயுற்றோரைத் தேடுவதும், அவர்களைத் தனிமைப்படுத்துவதும், பயணக் கட்டுப்பாடு, போன்ற கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இது அரசியலாகி, 1897ல் புனேயில் இரண்டு சாபேகர் சகோதரர்கள் (chapekar  brothers) புனே சிறப்பு பிளேக் கமிட்டி தலைவரான வால்டர் சார்லஸ் ராண்ட் (walter charles rand) என்ற இந்தியன் குடிமுறை பணி அதிகாரியை (Indian civil Services Officer), சுட்டுக் கொன்றனர்.

ஆக பிளேக், அரசியல், மத, பொருளாதார தாக்கத்தை சமுதாயத்தில் உண்டாக்கியது. 20ம் நூற்றாண்டில் தடுப்பு ஊசி கண்டு பிடித்த பின்னரே, இந்த நோயை முற்றிலுமாக கட்டுப்படுத்தினார்கள். இன்று கொரோனாவும் அதே நிலைக்கு உலகத்தை கொண்டு வந்துள்ளது. இது நம்மை நாமே தீவிரமாக ஆராய வேண்டிய தரும்.

சனி, 28 செப்டம்பர், 2019

கீழடி அகழ்வாராய்ச்சியும், சங்க இலக்கியமும்


353 செ.மீ (11.58 அடி) ஆத்தில்  கிடைத்த  பொருள்கள் கொண்டு பகுப்பாய்வு செய்ததில், கீழடியின் காலம் கி.மு. 580 என்று தெரிய வந்துள்ளது. ஏற்கனவே 200 செ.மீ (6.50 அடி) ஆத்தில் கிடைத்த பொருள்கள் பகுப்பாய்வில், அதன் காலம் கி.மு 214 மற்றும் கி.மு 174 என்று தெரிய வந்துள்ளது.  அதாவது கி.மு. 600 லிருந்து 174 வரை அந்த ஊர் இருந்தற்கு ஆதாரமாக இது அமைந்துள்ளது.

இதில் கால அளவு மற்றுமல்லாது நாம் கவனிக்க வேண்டியது, இங்கு கிடைத்த பொருள்கள். இலக்கியம் என்று கூறி சரித்திர ஆதாரமாக ஏற்க மறுக்கப்பட்ட சங்க இலக்கியங்களில், குறிப்பாக மதுரை காஞ்சி, நெடுநல்வாடை, - அடங்கிய பத்துபாட்டு, அகம், புறம், மற்றும் சிலம்பு, இவைகளில் இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருள்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது.

மதுரை காஞ்சி 

1)     வரி 90-91            -           கிணறு
2)     வரி 93                 -           பூட்டு
3)     வரி 258              -            கரும்பு இயந்திரம்
4)     வரி 315-316         -      முத்து, சங்கு கீறியறுத்த வளையல்
5)     வரி 400-401        -           சங்கு சுட்ட சுண்ணம்பு
6)     வரி 421-422         -          செம்பில் செய்த பொருள்
7)     வரி 433                -          சிவந்த நுண்ணிய பூவேலைபாடுடைய சேலை     
8)     வரி 519-22          -             சிறிய, நெடிய மடிப்புடவை
9)     வரி 637-641       -        கூரிய கத்தி
10)  வரி 721               -           கஞ்சியிட்ட புடவை
11)  வரி 730                  -         கல்லால் செய்த சாக்கடை நீர்கடத்தும் வாய்க்கால்        

புறம்

1)     பாடல் 24 – வரி 32-33       -    வளையல்
2)     பாடல் 233 – வரி 3-4          - பொன்னாற் செய்யப்பட்ட திகிரி(சக்ராயுதம்)
3)     பாடல் 274 – வரி 1-2          -   பூத்தொழில் செய்யப்பட்ட ஆடை

திருமுருகாற்றுப்படை

     வரி 15                                       -     பூவேலைப்பாடு உள்ள சிவப்பு உடை
    
நெடுநல்வாடை

    வரி 95-97                                  - மாடியில் விழும் மழை நீர் கடத்தும் குழாய்

சிலம்பு ஊர்காண் காதை

1)     வரி 145-147                    -    சுடுமண் ஒடு, செங்கல்
2)      வரி 205-207                   -   பருத்தி, எலிமயிர் (linen), பட்டு நூல் என பலவகை நூல்களால் செய்யப்படட மடிப்புடவை , ஆடை  
          
ஆதலால் இந்திய வரலாற்றை, சங்க இலக்கியங்களை கொண்டு மாற்றி எழுத வேண்டும்.

திங்கள், 15 ஜூலை, 2019

மதுரை நகருக்குள் அகழாய்வின் அவசியம்

https://tamil.thehindu.com/tamilnadu/article28427038.ece/amp/?__twitter_impression=true

 அகழாய்வு செய்ய வேண்டிய இடத்தில் வாகனம் நிறுத்தும் இடமா?- மதுரையில் பார்க்கிங் வசதிக்காக தோண்டியபோது தென்பட்ட பழங்கால மண்டபம்

Published : 14 Jul 2019 09:41 IST
Updated : 14 Jul 2019 09:41 IST
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பழைய சென்ட்ரல் மார்க்கெட்டை அப்புறப்படுத்திவிட்டு பல அடுக்கு பார்க்கிங் வசதி கட்டப்படும் இடத்தைத் தோண்டியபோது பூமிக்கடியில் பழங்கால மண்டபமும் தூணும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயில் அருகில் பழைய சென்ட்ரல் மார்க்கெட் அமைந்துள்ள பகுதியில் 2.03 ஏக்கரில் தரை தளத்திற்கு கீழ் இரண்டு தளங்களுடன் கூடிய மல்டி லெவல் கார் பார்க்கிங் ரூ.40.19 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வாகன நிறுத்தம் 1-ல் முதலாவது கீழ்தளத்தில் 118 கார்கள், 416 இருசக்கர வாகனங்களை நிறுத்தலாம். இரண்டாவது கீழ்தளத்தில் 1,185 இருசக்கர வாகனங்களை நிறுத்தலாம்.
அதேபோல் 2-வது வாகன நிறுத்தத்தின் முதல் கீழ்தளத்தில் 371 கார்கள், 2-வது கீழ்தளத்தில் 4,776 இருசக்கர வாகனங்களை நிறுத்தலாம்.
தரைதளம் சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாடு அமைப்புகள் மற்றும் புராதன மேம்பாட்டு செயல்பாடுகளுக்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
போதிய தீயணைப்பு வசதிகள், சூரிய சக்தியுடன் கூடிய அவசரகால மின் வழங்கல், தகவல் ஒளிபரப்பு சாதன வசதிகள் என பல்வேறு வசதிகள் இங்கு இடம்பெறவுள்ளன.
இந்நிலையில், இன்று இப்பகுதியில் பூமிக்கடியில் பழங்கால மண்டபம், தூண்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அருகிலேயே செங்கல் கட்டுமானமும் தெரிகிறது.
ராணி மங்கம்மாளின் அரண்மனையும் அவர் சிறை வைக்கப்பட்ட இடமும் இந்தப் பகுதி தான் என உறுதி செய்யப்படாத செவி வழிச் செய்தி இருக்கும் நிலையில் இப்படிப்பட்ட அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
அகழாய்வு செய்ய வேண்டிய இடத்தில் வாகன நிறுத்தும் இடம் கட்டக்கூடாது. அந்த இடத்தை அகழாய்வு செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகளை அரசும் வரலாற்று ஆய்வாளர்களும் மேற்கொள்ள வேண்டும் என மதுரை வாசிகள் கூறுகின்றனர்.

*********************************************************************************

மேற்கண்ட செய்தி என் மனதை பதர வைக்கிறது. ஏற்கனவே, கீழமாசி வீதி காவல் நிலையம், விளக்குதூண் அருகில் தெருமட்டத்திலிருந்து 10 அடிக்கும் கீழே இருந்த கழிப்பறை,   கீழ ஆவணிமூல வீதியில் புதுமண்டபம் எதிரிலிருந்த வசந்தன் குளம் என்ற ரவுண்டாணா, போன்ற மதுரையின் பழமை சின்னங்கள், சமீபகாலங்களில் அழிக்கப்பட்டன.

சங்ககால, மதுரை காஞ்சியில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் அங்காடி அமைந்த இடம் என்று என் ஆய்வில் குறிப்பிட்ட இடம் இது. இதே போல் மீனாட்சி பார்க், அரண்மனை அமைந்த இடம். இவை இரண்டையும் அகழ்வாய்வு செய்யவேண்டும் என்று அப்பொழுதைய மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் திரு. அமர்நாத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.

இப்பொழுது அதே இடத்தில் இக்கண்டுப்பிடிப்பை மூடி மறைக்கவே முயல்வார்கள். தற்பொழுது உள்ள மதுரை பாரளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடசன், மதுரையின் பழமையை காக்க நினைப்பவர். அவர் மதுரை பாரம்பரிய நகர் என்று அறிவிக்க நினைப்பவர். அவர் கவனத்திற்கு இதை எடுத்துச் சென்றால் ஏதாவது நடக்கும் என்று எண்ணுகிறேன்.

இவரின் அறிமுகம் யாருக்கவாது இருந்தால், எனக்கு அவரை சந்திக்க உதவவும்.