353 செ.மீ (11.58 அடி) ஆழத்தில் கிடைத்த
பொருள்கள் கொண்டு பகுப்பாய்வு செய்ததில், கீழடியின் காலம்
கி.மு. 580 என்று தெரிய வந்துள்ளது. ஏற்கனவே 200 செ.மீ (6.50
அடி) ஆழத்தில் கிடைத்த பொருள்கள் பகுப்பாய்வில், அதன் காலம் கி.மு 214 மற்றும் கி.மு 174 என்று தெரிய வந்துள்ளது. அதாவது கி.மு. 600 லிருந்து 174 வரை அந்த ஊர் இருந்ததற்கு ஆதாரமாக இது அமைந்துள்ளது.
இதில் கால அளவு மற்றுமல்லாது நாம்
கவனிக்க வேண்டியது, இங்கு கிடைத்த பொருள்கள். இலக்கியம் என்று கூறி சரித்திர ஆதாரமாக
ஏற்க மறுக்கப்பட்ட சங்க இலக்கியங்களில், குறிப்பாக மதுரை காஞ்சி, நெடுநல்வாடை, - அடங்கிய பத்துபாட்டு, அகம், புறம், மற்றும் சிலம்பு, இவைகளில் இங்கு
கண்டெடுக்கப்பட்ட பொருள்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது.
மதுரை காஞ்சி
1)
வரி
90-91 - கிணறு
2)
வரி
93 - பூட்டு
3)
வரி
258 - கரும்பு இயந்திரம்
4)
வரி
315-316 - முத்து, சங்கு கீறியறுத்த வளையல்
5)
வரி
400-401 - சங்கு சுட்ட சுண்ணம்பு
6)
வரி
421-422 - செம்பில் செய்த பொருள்
7)
வரி
433 - சிவந்த நுண்ணிய பூவேலைபாடுடைய சேலை
8)
வரி
519-22 - சிறிய, நெடிய மடிப்புடவை
9)
வரி
637-641 - கூரிய கத்தி
10) வரி 721 - கஞ்சியிட்ட புடவை
11) வரி 730 - கல்லால் செய்த சாக்கடை நீர்கடத்தும் வாய்க்கால்
புறம்
1)
பாடல்
24 – வரி 32-33 - வளையல்
2)
பாடல்
233 – வரி 3-4 - பொன்னாற் செய்யப்பட்ட திகிரி(சக்ராயுதம்)
3)
பாடல்
274 – வரி 1-2 - பூத்தொழில் செய்யப்பட்ட ஆடை
திருமுருகாற்றுப்படை
வரி 15 - பூவேலைப்பாடு உள்ள சிவப்பு உடை
நெடுநல்வாடை
வரி 95-97 - மாடியில்
விழும் மழை நீர் கடத்தும் குழாய்
சிலம்பு ஊர்காண்
காதை
1)
வரி
145-147 - சுடுமண் ஒடு, செங்கல்
2)
வரி 205-207 - பருத்தி, எலிமயிர் (linen), பட்டு நூல் என பலவகை நூல்களால் செய்யப்படட மடிப்புடவை , ஆடை
ஆதலால் இந்திய வரலாற்றை, சங்க இலக்கியங்களை கொண்டு மாற்றி எழுத வேண்டும்.